Change in Education System

 

Change in Education System

நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த  வேண்டும்

பல வருடங்களாக பாட அறிவை நினைவு வைத்து பரீட்சைக்கு முகம் கொடுப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து பிள்ளைகளை விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 கல்விச் சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தின் மூலம் தற்போதுள்ள பரீட்சை மையக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 வருடாந்த தேசிய கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்கள் உலகளாவிய அறிவுக்கான புகலிடமாக மாறும் வகையில் பாடநெறிகள் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக புதுமைப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.

 இந்த உருமாறும் மாற்றம் முன்பள்ளியில் இருந்தே பாடசாலை வகுப்பறை வழியாகவும், முன்பள்ளியில் சுற்றுச்சூழலை ஆர்வமுடன் அவதானிப்பதற்கான பரந்த இடமாகவும் போது வகுப்பறையில் கேள்விகளைக் கேட்டு, ஆதாரங்களைத் தொடர்வதன் மூலம் ஆய்வு ரீதியான சுயாதீனக் கல்வியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். என்றார்.

 பட்டப்படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவுடன் தொழிலில் ஈடுபடும் வகையில் தொழில்சார் திறன்களைக் கொண்ட பட்டதாரி படிப்புகளை நோக்கி கல்வி செலுத்தப்படும் வரை போராட்டங்கள் தவிர்க்க முடியாது என்றார்.


Post a Comment

Previous Post Next Post