புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
NEWS