பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளின் 200 ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 3 நாட்களுக்குள் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தேடும் மானவர்களின் புத்தக பைகளை பரிசோதிக்கும் போது ஏற்படும் ஆர்வத்தின் ஊடாக மானவர் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
எனினும், சிறுவர்களின் புத்தக பைகளை பொலிஸ் அதிகாரிகள் சோதனை செய்வதை தமது தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.