No change in the date of A/L Examination
டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றுல் ஒருபோதும் கோரவில்லை என்றார்.
இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வியாண்டு டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்காத அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.