Re-permission to conduct field trips in schools
பாடசாலைகளில் கல்வி மற்றும் களப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகளை மீண்டும் வழங்குதல்
பாடசாலைகளில் கல்வி மற்றும் களப் பயணங்களை மேற்கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றுநிரூபக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பின்வருமாறு :
கோவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக, கல்வி மற்றும் களப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும் தற்போது பாடசாலைகள் வழமை போல் இயங்கி வருவதால் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்படும் கல்வி மற்றும் களப் பயணங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கல்வி மற்றும் களப் பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அனுமதிப்பதில், பெற்றோரின் நிதி நிலைமை மற்றும் தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். என்பதோடு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
NEWS