new scheme has been implemented in 78 % schools
நாட்டில் 78% பாடசாலைகளில் தற்போது மாணவர்களுக்கு உணவு வழங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 7,925 பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் இயங்கி வருவதாக அதன் மேலதிக செயலாளர் திரு மஹிந்த யாப்பா தெரிவித்தார்.
தனியார் துறையினரின் பங்களிப்புடன் ஏனைய பாடசாலைகளிலும் சத்துணவு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவின் ஊட்டச்சத்து குறித்து கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
NEWS