Change of admission of children to schools
எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புள்ளி அடிப்படையில் மாணவர்களை சேர்க்கப்படும் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிறகு உயர்தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் வகுப்பறைகளில் கற்பிக்க முடியாத அளவில் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.